இடைநிலைப் பாடசாலைகளின் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகள், நோக்கங்கள்
ஆரம்பப் பாடசாலை மாணவர்களைப் பார்க்கிலும் இடைநிலைப் பாடசாலை மாணவர்களே அதிகளவான பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இவர்களே அவர்களது கல்வி வாழ்க்கையை முடித்து சமூகத்துக்கு செல்பவர்கள். இவ்வாறு சமூகத்திற்குள் நுழையும் இம்மாணவர்கள் சிறந்த நற்பிரஜைகளாக நல்லதொரு தொழிழை செய்யக்கூடியவர்களாக திகழ வேண்டும். இதற்காக அவர்களுக்கு பாடசாலையிலே ஆலோசனை வழிகாட்டல் சேவை கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இந்தவகையில் இடைநிலைப் பாடசாலைகளின் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகள், நோக்கங்களை கீழே விரிவாக நோக்குவோம். இடை நிலைப் பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் சேவையின் தேவையினை உருவாக்கிய காரணிகளாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம். குடும்ப சூழ் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விரும்பத்தக்க பொருத்தமான நடத்தையை விருத்தி செய்வதற்கு பாரம்பரியமாக சமுதாயத்தினால் வழங்கப்பட்டு வந்த ஆதரவு இல்லாத போனமை கட்டிளைப் பருவ விருத்தியுடன் ஏற்படும் விரைவான மாற்றங்கள் பாடசாலையில் சிக்கல்கள் அதிகரித்துள்ளமை குடும்பத்தகராறு, பெற்றோர் பிரிதல், பெற்றோர் வேலை தேடி வெளிநாடு செல்லுதல், குடும்பத்தின் குறைந்த பொருளாதார நிலை, க...