மூன்றாம் நிலைக் கல்வி
இன்றைய நவீன கல்வயில் மூன்றாம் நிலைக் கல்வியின் தாக்கமும் அதன் முக்கியத்துவமும் ஒருவரின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டுவது கல்வியாகும் . அந்த வகையில் கல்வியின் நிலைகள் ஆரம்ப நிலைக் கல்வி, இரண்டாம் நிலைக் கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி என மூன்றாக வகுக்கப்படுகின்றது . அந்த வகையில் இரண்டாம் நிலை கல்வியை முடித்த பின்னர் நாம் பெறும் கல்வி நிலை மூன்றாம் நிலைக் கல்வி எனப்படும் . பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள், சமூகக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், சிறப்பான மையங்கள் மற்றும் தொலைதூர கற்றல் மையங்கள் போன்ற குறிப்பிட்ட திறன்களை கற்பிக்கும் நிறுவனங்க...