Posts

Showing posts from February, 2022

ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படும் முக்கியமான கோட்பாடுகள்

Image
  ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படும் முக்கியமான கோட்பாடுகள் ஆலோசனைச் சேவையானது தற்காலத்தில் பரந்துபட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இத்துறையில் ஆழமான ஆய்வுகள் மற்றும் புதிய கோட்பாடுகள் உருவாக்கம் பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் இன்று ஆலோசனை சேவையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இக்கோட்பாடுகளாக கீழ்வருவனவற்றை குறிப்பிடலாம்.  உளப்பகுப்புக் கொள்கை  புலக்காட்சி நிகழ்வுக் கொள்கை  நடத்தைவாதக் கொள்கை  இருத்தலியல் கொள்கை  பகுத்தறிவு வாத கொள்கை  சமூக உளவியல் கொள்கை மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளுள் உளப்பகுப்பு கொள்கை மற்றும் நடத்தைவாத கோட்பாடுகள் என்பன எவ்வாறு ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை கீழே விரிவாக நோக்குவோம். உளப்பகுப்புக் கொள்கை இந்தக் கோட்பாட்டை முன் வைத்தவர்கள், சிக்மண்ட் பிராய்ட், அட்லர் (1927), அலெக்சாண்டர் (1963),  யுங் (1954), ஹோர்னி (1950), சலைவன் (1953) போன்றோர் ஆவர். இவர்களில் சிக்மண்ட் பிராய்டுடன் ஆரம்பமான அடிப்படை உளப்பகுப்பாய்வு முக்கியமானதாகும். எமது நிகழ்கால நடத்தையில் நனவிலி நோக்கங்களும் முரண்பாடுகளும் முக்கிய இடத்தை வகி
Image
  ஆலோசனை வழங்கல் சேவையில் வழங்கப்படுகின்ற பல்வேறு வகையான ஆலோசனைகள்  கஷ்டமான சந்தர்ப்பங்களின் போது உதவி செய்வதுடன் திருப்திகரமான செயல் திறனுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை நோக்காக கொண்டு வழங்கப்படுவதே ஆலோசனை வழங்கலாம். இத்தகைய ஆலோசனை வழங்கலானது பல வகைகளை கொண்டுள்ளது. அத்தகைய வகைகளாக கீழ் வருவனவற்றை குறிப்பிடலாம். உளவியல்சார் ஆலோசனை கல்வி சார் ஆலோசனை  தொழில்சார் ஆலோசனை  குடும்ப ஆலோசனை மேற்குறிப்பிட்டவாறு பொதுவாக நான்கு வகைகளாக ஆலோசனை வழங்கல் காணப்படுகிறது இத்தகைய வகைகள் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து செயல்படுவதில்லை. அதாவது மனிதனுடைய தேவைகளை தனித்தனியாக பிரித்து வைக்க முடியாதாகையால் மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளும் ஒன்றோடொன்று இடைத்தாக்கம் புரிந்த வண்ணம் உள்ளன. இந்த வகைகளை சற்று விரிவாக நோக்குவோம். உளவியல்சார் ஆலோசனை உளவியல் எனும் போது மனதை ஆய்வு செய்வதையும் புருந்து கொள்வதையும் பகுப்பாய்வு செய்வதையும் நோக்காகக் கொண்ட துறையே உளவியல் ஆகும். இத்தகைய உளவியல் ரீதியாக ஏற்படும் பயம், பதற்றம், அளவுக்கதிகமான பயம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும், ஒருவர் தமது சுய குண

ஆரம்ப பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகளும் நோக்கங்களும்.

Image
சமூக, பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பாடசாலையில் ஆலோசனை வழங்கல் சேவையினை அவசியமாக்கியுள்ளன. அந்தவகையில் படிப்படியாக பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையானது விருத்தியாக்கப்பட்டு வருகிறது. இச்சேவை ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான  ஆலோசனை வழங்கல் சேவை, இடைநிலை மாணவர்களுக்கான ஆலோசனை வழங்கல் சேவை என இரண்டு விதமாக வழங்கப்படுகிறது. அவற்றில் ஆரம்ப பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகளையும் நோக்கங்களையும் கீழே விரிவாக நோக்குவோம். ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை சேவையானது வழங்கப்படுவதற்கான நோக்கங்களாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம். குடும்பத்திலிருந்து போதிய கவனிப்பு கிடைக்காமையால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை கல்வியில் கவனம் செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல். கற்றல் குறைபாடுடைய பிள்ளைகளை சரியாக இனங்கண்டு அதற்குரிய மாற்றீடுகளை செய்து கல்வியில் சிறந்த முறையில்  திகழச்செய்தல். இத்தகைய நோக்கங்களை சற்று விரிவாக நோக்குவோம். ஆரம்ப பாடசாலையில் மாணவர்கள் கல்வியினை சிறந்த முறையில் விளங்கிக் கொண்டால் அதற்கடுத்ததாக  தொடரும் இடைநிலைக் கல்வியை சிறப்பாக தொடரலாம். ஆரம்ப பாடசாலை