'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

 கற்றல் ((Learning)) என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாக பெற்றுக்கொள்ளல், அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது உறுதிப்படுத்தல் ஆகும். கற்கும் திறனானது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் சில இயந்திரங்களுக்கும் காணப்படுகின்றது. மனிதன் தோன்றியதிலிருந்து கற்றுக் கொண்டே இருக்கின்றான். இதுவே உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாகும். 

  

குறிப்பாக மனிதர்களைக் குறிப்பிடும்போது  கற்றல் என்பது ஆய்வு, அனுபவம், அறிவுறுத்தல், பகுத்தறிவு மற்றும் அவதானிப்பு செயல்முறைகளின் விளைவாகும். கற்றல் என்பது புதிய அறிவைப் பெறுவது மட்டுமல்லாமல், நாம் வாழும் சமுதாயத்துடன் தொடர்புடைய நடத்தைகள், அணுகுமுறைகள் மற்றும் மதிப்புகளை மாற்றியமைப்பதையும் உள்ளடக்குகிறது. கற்றல் என்பது மனிதர்களுக்கு இன்றியமையாதது. ஏனென்றால் நாம் வாழும் சூழலிலும், நம் வாழ்நாள் முழுவதும் நாம் எதிர்கொள்ள வேண்டிய வௌ;வேறு சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள இது உதவுகிறது. 


கற்றல்(டுநயசniபெ) என்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளனர். அந்த வகையில் சிலரின் வரைவிலக்கணங்களை கீழே நோக்கலாம்.


லொவெல் 

'கற்றல்' என்பது நடத்தை மாற்றம் ஆகும். அதாவது அவதானம், பயிற்சி அல்லது செயலில் ஈடுபடல் என்பவற்றின் அடிப்படையில் நிலைத்திருக்கும் நடத்தை மாற்றம்.


மெல்வின் ஈ.மார்க்

'நீண்டதும் உறுதியானதும் நிலைத்து நிற்பதுமான ஒரு நடத்தை மாற்றம் கற்றல் ஆகும்.'

·         Gate and others (1946)

'கற்றல் என்பது சுற்றுச்சூழலின் தேவையைப் பூர்த்தி செய்யும் நடத்தையில் மாற்றம்.'


ஃப்ரீமேன், எஃப்.எஸ். (1958) 

'கற்றல் என்பது ஒரு சூழ்நிலைக்கு போதுமான அளவு பதிலளிக்கும் திறனை வளர்ப்பதற்கான செயல்முறையாகும். அது சரியாக எதிர்கொள்ளப்படாமல் இருக்கலாம்.'


டிராவர்ஸ், ஜே.எஃப். (1972) - 

'கற்றல் என்பது நடத்தையை மாற்றியமைக்கும் ஒரு செயல்முறையாகும்.'


மோர்ஸ், டபிள்யூ.சி. மற்றும் விங்கோ, ஜி.எம். (1968) 

'கற்றல் என்பது ஒருவரின் பார்வை, உணர்தல் மற்றும் அனுபவங்களின் மூலம் ஒருவரின் திறனை மாற்றுவது என வரையறுக்கலாம்.   


அனுபவம், அவதானம,; பயிற்சி, நடத்தை, இயக்கம் ஆகியவற்றின் மூலம் மனிதனிடத்தில் கற்றல் ஏற்படுகின்றது. மேலும் முதிர்ச்சியினால் ஏற்படும் மாற்றம் கற்றல் என்பதைவிட கற்றல் நிகழ்வதற்கு அனுபவமே அடிப்படையாகும். ஒருவரது ஆளுமையை முழுமையாகப் வெளிப்படுத்துவதற்கு உதவும் வழிகளில் ஒன்றாகவும் கற்றல் உள்ளது. கற்றல் என்பது எந்த இடத்திலும் எந்த நேரமும் இடம் பெறலாம். 


கற்றலை எளிமையாக்கும் செயன்முறை கற்பித்தலாகும்(Teaching)). ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு வழிமுறைகளில் இடம்பெற்ற கற்றல் கற்பித்தல் செயற்பாடானது தற்போது பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களுக்கு இடையிலான கற்றல் கற்பித்தல் செயற்பாடாக உள்ளது. மனித வளர்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கற்பித்தல் செயற்பாடு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்களுக்கு ஒரு அணுகுமுறையைக் கண்டறியவும், கற்றல் மற்றும் கல்வியைப் பெறுவதன் அவசியத்தை அவர்களுக்கு தெரிவிக்கவும், அதே போல் எந்தவொரு ஒழுக்கத்தையும் திறமையாக கற்பிக்கவும், சில திறன்கள் மற்றும் திறன்களை வளர்க்கவும், கற்பித்தலால் முடியும். இந்த செயல்முறையை ஒரு உண்மையான கலை என்று அழைக்கலாம்.  


கற்பித்தல் என்பது மனித கல்வியின் முழுமையான செயல்முறையின் அறிவியலாகும். இதில் பயிற்சி, கல்வி மற்றும் தனிநபரின் வளர்ச்சி ஆகியவை அடங்கும். நன்கு அறியப்பட்ட விளம்பரதாரரும் ஆசிரியருமான எஸ்.ஐ. கெசென் இதைப் பற்றி பின்வருமாறு எழுதினார்: 'கல்வியியல் ஒரு அறிவியல். இது கல்வியிலிருந்து வேறுபட்டது, இது அதன் பாடமாக செயல்படுகிறது. இந்த அர்த்தத்தில், கற்பித்தல் என்பது ஒரு நபரைப் பற்றிய அறிவியலில் ஒன்றாகும். அதாவது, அவரது கல்வி ஒரு நபராக மாறுவது.


பி.ஓ.ஸ்மித்( '” B.O. Smith) கற்பித்தலை பின்வருமாறு வரையறுத்தார்: 'கற்பித்தல் என்பது ஒரு அமைப்பு கற்றலைத் தூண்டும் நோக்கம் கொண்ட செயல்கள்' ஆகும். மற்றும் கேஜின் (Gage ,1963); கருத்துப்படி, 'கற்பித்தல் என்பது ஒரு வகையான தனிப்பட்ட செல்வாக்கு மற்றொரு நபரின் நடத்தை திறனை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.' என்பதாகும். 


மேலும் எட்மண்ட் அமிடன் (1967) கற்பித்தலை 'ஒரு ஊடாடும் செயல்முறையாகும.; இது முதன்மையாக வகுப்பறையை உள்ளடக்கியது. ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே நடக்கும் பேச்சு மற்றும் சில வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது இது நிகழ்கிறது.' என்றும் குறிப்பிடுகிறார்.


கற்றல் - கற்பித்தல் செயல்முறை என்பது, சமூகத்தில் உள்ள பிள்ளைகளை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் (பொதுவாக பாடசாலையில்) அவர்கள் வாழும் உலகத்துடன் தங்களை மாற்றிக் கொள்ள கூடிய வகையில்,  விரைவில் பயிற்சியளிக்கும் ஒரு வழிமுறையாகும். கற்பித்தல் - கற்றல் நான்கு அம்சங்களைக் கொண்டது; அவை ஆசிரியர், மாணவர், கற்றல் செயல்முறை மற்றும் கற்றல் சூழ்நிலை என்பனவாகும். மாணவர்களுக்கான கற்றல் சூழ்நிலையை ஆசிரியர் உருவாக்குகிறார். கற்றல் செயல்முறை என்பது மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையிலான தொடர்பு. இத் தொடர்பு சரியாக அமையும் போதே சிறந்த நடத்தை மாற்றத்தை மாணவர்களிடம் காணலாம். கற்பித்தல் மற்றும் கற்றல் உறவு அல்லது தொடர்பு ஒரு வரைபடத்தின் உதவியுடன் விளக்கப்படலாம்.


மேலும் கற்பித்தல் - கற்றல் செயல்முறை என்பதற்கு, ஆசிரியர், கற்றல், பாடத்திட்டம் மற்றும் பிற மாறிகள் ஒரு முறையான முறையில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு வழிமுறையாகும். எனவும் குறிப்பிடலாம்.


மாணவர்களிடையே அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமியங்கள், நல்ல பண்பாடுகள் என்பவற்றை வளர்த்து எதிர்காலத்தில் நற்பிரசையாக அவர்களை உருவாக்குவதற்கு உதவுகின்ற பணியாக கற்பித்தல் நடவடிக்கைகளைக் குறிப்பிட முடியும். கற்றலின் தொடக்கம் வகுப்பறையாகும்.  இத்தைகைய கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியின் ஊடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும்  இந்த வகையில்  மூவழித்தொடர்பாடல்( A three way communication ) பற்றி கீழே விரிவாக நோக்குவோம்.


கற்பித்தல் - கற்றல் செயல்முறையின் மையமாக ஆசிரியருக்கும் கற்பவர்களுக்கும் (மாணவர்களுக்கும்);  இடையிலான தொடர்பு உள்ளது.  இந்த தொடர்பு, ஒரு வகையான மூவழி தொடர்பு மூலம் கற்பவர்களிடத்தே  நடத்தை மாற்றங்களை விளைவிக்கிறது. 

ஆசிரியரிடமிருந்து கற்பவருக்கு (from the teacher to the learner))

கற்பவரிடமிருந்து ஆசிரியருக்கு (from learner to teacher)

மீண்டும் ஆசிரியரிடமிருந்து கற்பவருக்கு (again from teacher to learner


மேற்குறிப்பிட்ட வகையிலே மூவழி தொடர்பு உள்ளது. இந்த மூவழி தொடர்பானது கற்பவருக்கு வழிகாட்டும் செயல்முறையின் எட்டு படிகளை உள்ளடக்கியது. அவை


கல்வியின் நோக்கமும் குறிக்கோள்களும் (Educational objectives and contents)

ஆசிரியர் வெளிக்காட்டல் (Information presenting)

மாணவர் தகவலை பெறல் (Information receiving)

சிந்தித்தல் (மாணவர்கள்) (Information processing  )

துலங்குதல் (Responding)

இனங்காணல் (Diagnosing)

மதிப்பீடு ((Evaluating)

பொருத்தமான பின்னூட்டலைக் கொடுத்தல் (KR


இத்தகைய படிமுறைகளிலேயே  மூவழித் தொடர்பு  உள்ளடங்குகிறது. அதாவது, ஆசிரியரிடமிருந்து கற்பவருக்கு (படிகள் 1 மற்றும் 2), கற்பவரிடமிருந்து ஆசிரியருக்கு (படிகள் 3 முதல் 5 வரை), மீண்டும் ஆசிரியரிடமிருந்து கற்பவருக்கு (படிகள் 6 முதல் 8 வரை) இத்தகைய இந்த மூவழி தொடர்பு மூலம், ஆசிரியர் தனது கற்பித்தல் போக்கை உறுதியான முறையில் வழிநடாத்த முடியும். மறுபுறம், மாணவர் தனது கற்றல் எவ்வளவு நன்றாக முன்னேற்றமடைந்துள்ளது  என்பதையும் அறிய முடியும். இத்தைகய மூவழி தொடர்பாடல் நிகழ்ச்சி  மூலம்  கற்றல் கற்பித்தல் செயற்பாடு இடம்பெறுவதன் ஊடாக ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கமானது சிறப்பாக அமைகிறது. 


மூவழி தொடர்பாடல் நிகழ்ச்சியினை பின்வரும் வரைபடத்தின் உதவியுடன் விளங்கிக் கொள்ளலாம். 

 

      


செயல்முறைகளை நடத்துவதற்கு படி 7 இல் உள்ள வடிவ மதிப்பீடு மற்றும் படி 8 இல்  உள்ள  முசு (பின்னூட்டல்) ஆகியவை முக்கியமானவை. KR என்பது பல வகைகளைக் கொண்ட ஒரு வகையான பின்னூட்டத் தகவல் ஆகும். உதாரணமாக, மாணவரது நடத்தைக்கு பதிலளிப்பதில், ஆசிரியர்,  'நல்லது' 'தவறு' 'இல்லை' 'நல்லது' 'ஹம்' 'அற்புதம்' 'சுவாரஸ்யமானது'  எனக் கூறுதல் மற்றும் கற்பவரின் கருத்துக்களைத் திரும்ப சுருக்கமாகக் கூறுதல். சில சமயங்களில் ஆசிரியர் பல சொற்களற்ற முசு (பின்னூட்டலை)  கொடுப்பதையும் காணலாம். உதாரணமாக தலையசைத்தல், புன்னகைத்தல், கண் சிமிட்டுதல்,  ஆகிய சைகைகளை செய்வதைக் குறிப்பிடலாம். 


உதாரணமாக, தரம் 2 மாணவர்களுக்கு  கணிதப்பாடத்தில் உள்ள ,¼ ,½  என்பன பற்றிய அறிவினை வழங்குவதற்கு  மாணவர்களுக்கு பரீட்சயமான பீட்சா, கேக் என்பவற்றை வெட்டுவது தொடர்பான விளக்கத்தினை வழங்குதல். இதன் ஊடாக மாணவன் ¼ ,½ பற்றிய தெளிவினை பெற்றுக்கொள்கின்றான். இதன் பின்னர் மாணவனிடம்  ¼ ,½ தொடர்பான பயிற்சிகளைக் கொடுக்கும் போது அதனை சிறந்த முறையில் செய்வானாயின் அங்கு சிறந்த மூவழித் தொடர்பாடல் இடம்பெற்று ஆசிரியர் மாணவர் இடைத்தாக்கம் நன்றாக அமைந்துள்ளது எனலாம்.


அதாவது ஆசிரியர் பாட அலகில் உள்ள, அடைய வேண்டிய தேர்ச்சி பற்றி அறிந்து கொண்டு அதனை தகவல்களாக மாற்றி மாணவர்களிடம் வெளிப்படுத்துவார். பின்னர் மாணவர்கள் தகவலைப் பெற்று அது தொடர்பாக சிந்தித்து அதற்கு ஏற்றவாறு துலங்குவர். அதனை ஆசிரியர் இனங்கண்டு மதிப்பீட்டினைச் செய்வார். அதன் பின் மாணவர்களுக்கு பொருத்தமான பின்னூட்டலை  வழங்குவார். இதுவே மூவழித் தொடர்பாடல் நிகழ்ச்சியாகும். இதனை அனைத்து ஆசிரியர்களும் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகும். ஆசிரியரிடமிருந்து கற்பவருக்கு எனும் செயன்முறை மட்டுமே சில ஆசிரியர்களிடம் உள்ளது. மற்ற 'கற்பவரிடமிருந்து ஆசிரியருக்கு, மீண்டும் ஆசிரியரிடமிருந்து கற்பவருக்கு' எனும் மற்ற இரண்டு செயன்முறைகளும் இடம்பெறுவது குறைவாகும். இதன்போது ஆசிரியருக்கும் மாணவருக்குமான தொடர்பு குறைவாகும் அதே வேளை கற்றல் கற்பித்தல் செயன்முறையும் வினைத்திறனாக அமையாது.


கற்றல் செயன்முறையில் கற்றலும் கற்பித்தலும் இணைக்கப்பட்டுள்ளது. கற்காமல் ஒரு விடயத்தை கற்பிக்க முடியாது. கற்பித்தல்-கற்றல் செயன்முறை பயனுள்ளதாக இருக்க, அதன் பல்வேறு அம்சங்களை நாம் மிகவும் கவனமாகவும் விமர்சன ரீதியாகவும் பார்க்க வேண்டும். கற்பித்தல்-கற்றல்  செயன்முறையினை தூண்டுதலாகவும் பொருத்தமானதாகவும் மாற்றுவதில் பின்வரும் அம்சங்கள் முக்கிய பங்களிக்கின்றன. 


பொருள் அல்லது உள்ளடக்கம் மற்றும் செயல்பாடுகளின் கட்டளை, திட்டமிடல் மற்றும் அமைப்பு 

வகுப்புக் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் - பொருத்தமான வகுப்புக் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் வெற்றிகரமான ஆசிரியரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும். ஒரு நல்ல ஆசிரியர் என்பது மாணவர்களிடத்தே பயம் அல்லது அதிகக் கையாளுதல் ஆகியவற்றை மேற்கொள்பவர் அல்ல. மாறாக கற்பவர் மீதான ஆர்வம், விடயத்தின் மீது நல்ல விளக்கம் மற்றும் அதை சுவாரஸ்யமாகவும் திறம்படவும் முன்வைக்கும் திறன் ஆகியவற்றின் மூலம் தனது வகுப்பைக் கட்டுப்படுத்தக் கூடியவரே நல்ல ஆசிரியர் ஆவார். மாணவர்களும் இத்தகைய ஆசிரியரின்  கற்பித்தலையே விரும்புகிறார்கள் பாராட்டுகிறார்கள் மற்றும் கற்பித்தல்-கற்றல் செயல்பாட்டில் ஆசிரியருடன் ஒத்துழைக்கிறார்கள்.

கற்பவர்களின் உளவியல் - பாடம் பற்றிய அனைத்து அறிவும், அதை முறையாகவும், திறம்படவும் முன்வைக்கும் திறன் மற்றும் வகுப்புச் சூழலைக் கட்டுப்படுத்தும் திறன்,  என்பவற்றால் கற்பித்தல்-கற்றல் ஆகியவை பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஒரு ஆசிரியர் உணர வேண்டும். கற்பவர்களின் ஆர்வங்கள், திறன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்பவராக ஆசிரியர் காணப்பட வேண்டும். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களைப்  புரிந்துகொண்டு அவர்களை ஊக்குவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர் கற்பவர்களிடம் நேர்மையாகவும் இருக்க வேண்டும். ஒரு சிறந்த ஆசிரியர் எப்போதும் பணிவானவராகவும் கற்பவர்களுடன் பழகுவதில் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

மதிப்பீடு -      கற்பித்தல் - கற்றல் செயல்பாட்டில் மதிப்பீடு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு ஆசிரியர் தனது மாணவர்களை அவர்கள் எவ்வாறு அதிக முன்னேற்றம் அடைய முடியும் என்பதைக் கண்டறிய கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக அவர் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தலாம். ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகிய இருவரின் சுய மதிப்பீடு மிகவும் முக்கியமானது.

கற்பித்தல் - கற்றல் மற்றும் மதிப்பீடு - கற்றல் மற்றும் மதிப்பீடு ஆகிய இரண்டிற்கும் கற்பித்தல் மையமாக உள்ளது. கற்பித்தல் நோக்கங்கள் (முடிவுகள்), கற்றல் அனுபவம் (சராசரி) மற்றும் மதிப்பீடு (கற்பித்த மற்றும் கற்றுக்கொண்டவற்றின் சான்றுகள்) ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது. மதிப்பீடு என்பது தீர்மானிக்கும் செயல்முறையாகும்;

கற்பித்தல் செயல்பாடு மற்றும் கற்றல் செயல்பாடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கற்பித்தல் செயல்பாடுகள் வெற்றிகரமாக இருக்க, கற்றல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் நோக்கங்களை நிறைவேற்ற தேவையான கற்றல் செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, கற்றல் செயல்பாடுகளை முதலில் கருத்தில் கொள்வது விரும்பத்தக்கது. கற்றல் செயல்பாடுகள் பின்வருமாறு;

1. தூண்டுதல் சூழ்நிலையின் பாகுபாடு.

2. பதில்கள் அல்லது அறிவாற்றல்.

3. சூழ்நிலையின் குறிப்பிட்ட கூறுகளுக்கும் பதில்களுக்கும் இடையிலான உறவை ஒருங்கிணைப்பது.

4. பயன்பாட்டை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழலின் மீது கட்டுப்பாடு.

5. திட்டவட்டமான நடத்தை மாற்றங்கள்.


எனவே மேலே குறிப்பிட்ட மூவழித் தொடர்பாடல் வகுப்பறையில் சிறந்த முறையில் இடம்பெறாத போது மாணவர்களிடையே நாம் எதிர்பார்த்த நடத்தை மாற்றத்தை அவதானிக்க முடியாது. அதாவது மாணவன்  ஆசிரியர் வழங்கிய தகவலைக் கொண்டு அதற்கேற்ப சிந்தித்து அதற்குரிய துலங்களைக் காட்ட வேண்டும். மாறாக நடக்குமானால் ஆசிரியர் மாணவர் இடைத்தாக்கம் சிறந்த முறையில் அமையவில்லை எனலாம், எனவே சிறந்த முறையில்  மூவழித் தொடர்பாடல் நிகழ்ச்சியினைப் பேணி  ஆசிரியர் மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக இடம்பெற ஆசிரியரும் மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக இடம்பெற ஆசிரியரும் மாணவரும் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.


Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.