Posts

Showing posts from July, 2021

எண்ணக்கரு உருவாக்கம்

Image
பல தொடர்பான எண்ணக்கருக்களை பொதுமையாக்கம் செய்தலே சிந்தனைசார் தொழிற்பாடாகும் . இக்கருத்துப் பற்றிய உமது விளக்கத்தை முன்வைக்குக . “ எண்ணக்கரு என்பது யாதேனும் பொருள் தொகுதியில் ஏற்படத்தக்க முக்கியமல்லாதவையான மாற்றங்களை மறந்து அவற்றுக்கு இடையிலான பிரதானமான இயல்புகளை மாத்திரம் கவனத்திற் கொண்டு அவற்றை ஒரு தொகுதியாகக் கொண்டு , அவற்றை ஒரு பொதுப்பெயரினால் அழைப்பதாகும் ”. எனவே சகல ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி “ ஆசிரியர் ” எனும் எண்ணக்கருவும் , சகல மரங்களையும் ஒன்று திரட்டி “ மரம் ” எனும் எண்ணக்கருவும் முன்வைக்கப்பட்டுள்ளன . ஓத்த இயல்புகளைக் கொண்ட பொருள்களை ஒன்று திரட்டி அவற்றுக்கு ஒரு பொதுப்பெயரை வழற்குவதால் அது ஒரு எண்ணக்கரு எனக் குறிப்பிடப்படுகிறது . அதாவது சமமான பண்புகளைக் கொண்ட தூண்டிக்கான பலவற்றைத் திரட்டுவதால் தோன்றுவதே ஒரு எண்ணக்கரு எனப்படுகின்றது . எண்ணக்கரு என்பது பொதுவான தன்மைகளைக் கொண்ட தூண்டிகளின் ஒழுங்கான   ஓர் அமைப்பு என்று கூறுவர் . இங்கு தூண்டி என்பது எமது ஐம்புலன்களுக்கு எட்டுகின்ற பொருட்கள

மாணவர்களின் ஞாபகத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஆசிரியர் மேற்கொள்ளும் நடைமுறைகள்

Image
மாணவர்களின் ஞாபகத்திறனை வளர்த்துக் கொள்வதற்கும் கற்றுக் கொண்டவற்றை நினைவில் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் ஆசிரியர் என்ற ரீதியில் நீர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்குக . நம் மூளையில் தேக்கிவைக்கின்ற விடயங்களைத் தேவைப்படும் போது வெளியே எடுத்து தகுந்த நேரத்தில் அதை உபயோகப்படுத்துவது “ ஞாபகம் ” ஆகும் . உள்வாங்கப்பட்ட தகவல்களை களஞ்சியப்படுத்தி சேமித்து அவற்றைத் தேவையான போது மீட்டி எடுத்துக் கொள்ளும் திறன் ஞாபகம் அல்லது நினைவு என வரைவிலக்கணப்படுத்தலாம் . யாதேனும் தூண்டலின்பால் கவனம் செலுத்தும் போது ஒருவரின் புலனங்கங்கள் மூலம் தகவல்கள் பிரவகிக்கும் . இத்தகவல்களை உளரீதியில் இனங்காணலின் அல்லது புலக்காட்சி பெறலின் விளைவாக உள்ளத்தில் உருவாகும் மனப்பாடங்களை பிற்காலத்தில் எமக்குத் தேவையான போது நினைவுபடுத்தலாம் . எனவே ஞாபகம் என்பது “ தகவல்களை களஞ்சியப்படுத்தும் திறனும் அவற்றை மீண்டும் நினைவு கூறும் திறனுமாகும் ”. ஞாபகம் தொடர்பாக பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர் . அந்தவகையில் , Ø