Posts

Showing posts from September, 2021

தரவுகளை கையாள்வதில் பாரம்பரிய முறைக்கும் நவீன முறைகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி உதாரணம் மூலம் ஆராய்க.

Image
உலகில் நாகரீகங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே தரவுகளின் தேவை உணரப்பட்டது. ஆதிகால மனிதன் தொடக்கம் தற்கால மனிதன் வரைக்கும் தரவுகள் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஆரம்பகால மனிதன் தனக்கு கிடைத்த பொருட்களில் தனக்கு தேவையான விடயங்களைக் குறிப்பிட்டு வைத்தான். அப் பொருட்களாக எழும்புகள், களிமண் தட்டுக்கள், ஓலை ஈச்சை மட்டைகள் என்பனவாகும்.  மொசபத்தேமிய களிமண் தட்டினை உதாரணமாக குறிப்பிட முடியும். இவ்வாறு பெறப்பட்ட தரவுகளைக் கொண்டே அவ் மக்கள் தங்களது வாழ்வொழுங்கை அமைத்தனர். பயணங்களின் போது வாணசாஷ்த்திர குறிப்புகளை பயன்படுத்தியமை தரவுப் பயன்பாட்டின் உச்ச கட்டத்தினை அவதானிக்கலாம். இவ் பரினாம வளர்ச்சியின் மைக்கல்லாக நவீன தரவு கையாளுகையான இலத்திரனியல் தரவுக் கட்டமைப்பைக் குறிப்பிடலாம். இணையத்தளத்தின் வருகையை தொடர்ந்து இதன் செல்வாக்கு அதிகமாக உள்ளது. புதிய, இலகுவான தரவுக்கையாளுகைகள் எமக்கு கிடைக்கக்கூடியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் தரவு என்பது, குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான அறிவினை விருத்தி செய்யக்கூடிய அனைத்து விபரங்களும் தரவுகள் எனப்படுகின்றது. இத்தரவானது பரிசோதனை ( Experiment ) மூலமான வெளியீட

B.F ஸ்கின்னரின் மீளவலியுறுத்தல் கொள்கை

Image
மீளவலியுறுத்தல் செயற்பாடும் பின்னூட்டலும் வகுப்பறை கற்பித்தல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்கும். இக்கூற்றினை அடிப்படையாகக் கொண்டு கனிஷ்ட இடைநிலை வகுப்புக்களில் எவ்வாறான பிரயோகத்தை மேற்கொள்வீர் என்பதை ஆராய்க.   மீளவலியுறுத்தல் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமானவர் B.F ஸ்கின்னர் ஆவார். இவர் 20 மார்ச் 1904 அமெரிக்காவில் பிறந்தார். ஹவார்ட், மின்னி செட்டா மற்றும்  இண்டியான போன்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்தார். அவர் தனது வாழ்நாளில் இறுதியில் கூட உளவியல் தொடர்பாக எழுதுவதிலும் சொல்வதிலும், சொற்பொழிவிலும் ஈடுபட்டார். இதனால் இவருக்கு    அமெரிக்க உளவியல் சங்கம் வாழ்நாள் சாதனையாளர்  விருதினை வழங்கி கௌரவித்தது. மேலும் இவர் 21 நூல்களையும் 180 சிறு கட்டுரைகளையும் எழுதினார் என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.  இவர் அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் மீளவலியுறுத்தல் பற்றிய பல பரிசோதனைகளை நடாத்தி அது நடத்தையில் என்ன மாற்றங்களை விளைவிக்கின்றெதென அறிந்தார். ஹல், தோண்டைக் ஆகியோரின் பரிசோதனைகளையே ஸ்கின்னரும் ஏற்பாடு செய்து கற்றல் மீளவலியுறுத்தல் பற்றிய பல உண்மைகளை கண்டற

பவ்லோவின் நிபந்தனைப்படுத்தல் கோட்பாடு

Image
பவ்லோவின் நிபந்தனைப்படுத்தல் கோட்பாடு வகுப்பறைக் கற்பித்தலில் ஆசிரியருக்கு எவ்வளவு தூரம் பயனுடையதாகிறது என்பதை நீர் விரும்பும் ஒரு பாடத்தின் ஊடாக பல்வேறு உதாரணங்களுடன் விளக்குக.  ஆதிகாலத்தில் தத்துவத்துடன் இணைந்திருந்த உளவியல் 19ஆம் நூற்றாண்டிலிருந்து தனித்துவம் வாய்ந்த ஒருதுறையாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் வளர்ந்தது. இவ்வளரச்சிக்கு வித்தாக கற்றல் என்ற எண்ணக்கருவே அமைந்தது. முக்கிய உளவியல் விருத்தி தொடர்பான நிகழ்வாக வில்லியம் வொன்ட்,(William Wund : 1832-1920 ) என்ற உளவியல் அறிஞர் உலகின் முதலாவது ஆய்வு கூடத்தினை 1879ஆம் ஆண்டு ஜேர்மனியின் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் தொடக்கி வைத்ததைக் குறிப்பிடலாம். இதனூடாகத் தத்துவத்திலிருந்து வேறாகி உளவியல் ஒரு விஞ்ஞானக்கலையானது. கற்றலும் அது தொடர்பான கோட்பாடுகளும் எழ வழிகாட்டியது.   தொடரந்து சார்ல்ஸ் டாவினின் உயிரியல் பரிணாமவாதமும், கூர்ப்பு தொடர்பான  ஆய்வுகளும் மனித உளவியல் தொடர்பான ஆய்வுகளும் உதவின. பின்னர் நடத்தைசார் உளவியலாளர்கள் தூண்டல் மற்றும் துலங்கல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தைவாத உளவியல் கற்றல் கொள்கையை விருத்தியாக்கினர்.  கற்றலென்பது