தரவுகளை கையாள்வதில் பாரம்பரிய முறைக்கும் நவீன முறைகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி உதாரணம் மூலம் ஆராய்க.

உலகில் நாகரீகங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே தரவுகளின் தேவை உணரப்பட்டது. ஆதிகால மனிதன் தொடக்கம் தற்கால மனிதன் வரைக்கும் தரவுகள் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஆரம்பகால மனிதன் தனக்கு கிடைத்த பொருட்களில் தனக்கு தேவையான விடயங்களைக் குறிப்பிட்டு வைத்தான். அப் பொருட்களாக எழும்புகள், களிமண் தட்டுக்கள், ஓலை ஈச்சை மட்டைகள் என்பனவாகும். 

மொசபத்தேமிய களிமண் தட்டினை உதாரணமாக குறிப்பிட முடியும். இவ்வாறு பெறப்பட்ட தரவுகளைக் கொண்டே அவ் மக்கள் தங்களது வாழ்வொழுங்கை அமைத்தனர். பயணங்களின் போது வாணசாஷ்த்திர குறிப்புகளை பயன்படுத்தியமை தரவுப் பயன்பாட்டின் உச்ச கட்டத்தினை அவதானிக்கலாம்.


இவ் பரினாம வளர்ச்சியின் மைக்கல்லாக நவீன தரவு கையாளுகையான இலத்திரனியல் தரவுக் கட்டமைப்பைக் குறிப்பிடலாம். இணையத்தளத்தின் வருகையை தொடர்ந்து இதன் செல்வாக்கு அதிகமாக உள்ளது. புதிய, இலகுவான தரவுக்கையாளுகைகள் எமக்கு கிடைக்கக்கூடியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் தரவு என்பது, குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான அறிவினை விருத்தி செய்யக்கூடிய அனைத்து விபரங்களும் தரவுகள் எனப்படுகின்றது. இத்தரவானது பரிசோதனை (Experiment) மூலமான வெளியீடுகளையும் அளவையீட்டு மூலமான(Survey) அவதானிப்புக்களையும் (Observation) கொண்டவையாக இருக்கலாம். இத் தரவுகளின் அளவு சார்(Measure) அடிப்படையில் இரு பிரிவாக நோக்கலாம்.


01. பண்பறி தரவு (Qualitive Data)

02. கணியத் தரவு (Quantitative Data)


அளவுப் பெருமானங்கள் கொடுக்கப்படமுடியாத தரவுகள் பண்பறி தரவு எனப்படும். இவை அளக்கமுடியாத தரவுகள் எனவும் அழைக்கப்படும். உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர் தொடர்பான பெயர், விலாசம், இனம், பால், தொழிற்தகமை, பதவி போன்ற தரவுகளாகும்.


அளவுப் பெறுமானம் கொடுத்து அளவிட்டுக்கொள்ளக் கூடிய தரவுகள் எல்லாம் கணியத்தரவுகள் அல்லது அளவறிமுறைத் தரவுகள் எனப்படும். உதாரணமாக தொழிலாளர்களின் பிறந்த திகதி, அடையாள அட்டை எண், வயது, நிறை, உயரம் போன்றன கணியத் தரவுகளாகும். இக் கணியத் தரவுகளின் பெறுமான அமைப்பினைப் பொறுத்து மேலும் இரு பிரிவாக வகைப்படுத்தி நோக்கலாம்.

01. பின்னகத் தரவுகள் (Discrete Data)

02. தொடர் தரவுகள் (Continuous Data)

குறிப்பிட்ட விடயத்தைக் காட்டும் எண்ணியல் தரவுகளை மேலும் சிறிய அலகுகளாகப் பிரித்துக்காட்ட முடியாத தரவுகள் பின்னகத் தரவுகள் அல்லது பின்னக மாறிகள் எனப்படும்.உதாரணமாக, தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை எப்போது முழுப் பெறுமானத்தினை கொண்டதாக அமைவது குறிப்பிடலாம். 


தொடரான தரவுகள் என்பது குறிப்பிட்ட விடயத்தை வெளிப்படுத்தி காட்டும் எண்ணியல் பெறுமானங்களை மேலும், சிறிய அலகுகளாகப் பிரித்து காட்டக் கூடிய அல்லது பிரிபடக் கூடிய தரவுகள் தொடர் தரவுகள் அல்லது தொடர் மாறிகள் எனஎனப்படும். உதாரணமாக வாகனம் ஒன்றின் மணித்தியால ஓட்டவேக அளவுகளை குறிப்பிடலாம். தரவுகளின் மாற்றத்தை அல்லது அசைவை வைத்து மாறிகள் (Variables) மற்றும் மாறிலிகள் (Constant) என இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.


 மேலும் புள்ளி விபரத் தரவுகள் சேகரித்துக் கொள்ளும் மூலகங்களின் அடிப்படையில் தரவுகளை இரு பிரிவாகப் பிரித்து நோக்கலாம்.


01. முதன்மைத் தரவு (Primary Data)

02. துணைத் தரவு (Secondary Data)


குறிப்பிட்ட தேவை கருதி புள்ளி விபரவியலாளர் ஒருவரினால் நேரடி விசாரணை மூலம் முதன் முறையாகப் பெற்றுக் கொள்ளப்படும் தரவுகள் முதன்மைத் தரவுகள் அல்லது ஆரம்பத் தரவுகள் அல்லது பச்சைத் தரவுகள் எனப்படும். மேலும் இவை ஒழுங்குபடுத்தப்படாத தரவுகளாகும். உதாரணமாக, சந்தையில் அதிகமாக விற்பனையாகும் பொருட்கள் தொடர்பான கள ஆய்வுத் தரவுகள்.


ஆய்வுக்குத் தேவையான தரவுகளாக ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுகளைப் பயன்படுத்துவதே துணைத் தரவுகள் அல்லது இரண்டாம் நிலைத் தரவுகள் எனப்படும். உதாரணமாக, ஆண்டறிக்கைகள், புள்ளிவிபரப் புத்தகங்கள் போன்றவையைக் குறிப்பிடலாம்.


தரவுகளை கையாளுதல் எனப்படுவது தரவானது முறையாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதா? , உரிய இடத்திற்கு சென்றடைந்துள்ளதா?, பாதுகாப்பாக உள்ளதா? அல்லது முறையாக அளிக்கப்பட்டுவிட்டதா? என ஆராயும் நடைமுறையாகும்.


தரவுகளை கையாளும் முறைகளானது தரவின் பாதுகாப்பிற்கும் அதன்

நம்பகத்தன்மைக்கும் முக்கியமானதாகும். தரவுகளை முறையாக கையாள்வதற்கு ஒழுங்கான திட்டமிடல அவசியமாகும். இச் செயற்பாட்டினை இரு முறைகளில் மேற்கொள்ள முடியும். அவையாவன, கையால் கையாளும் பாரம்பரிய முறை மற்றும் இலத்திரனியல் முறை என்பனவாகும்.


கையால் தரவுகளை கையாளும் போது அதாவது பாரம்பரிய முறையில் காகிதங்கள், பென்சில், பேனா போன்ற காகிதாதிகள் பயன்படுத்தப்படுகிறது. இம் முறையில் பெரும்பாலும் அட்டவணைகள் அமைத்து தரவுகள் களஞ்சியப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, பாடசாலைப் பாடப் பதிவுப் புத்தகம் (Record Book)


பாரம்பரிய முறையில் தரவுகள் சேகரிப்பு முறைகளாக பல விடயங்கள் பயன்படுத்தப்பட்டன.


  • அவதானிப்பு


ஒரு நிகழ்வு தொடர்பாக தொடர் அவதானிப்புக்கள் மூலம் தரவு பெற்றுக் கொள்ளப்படுவதனை குறிக்கும் குறிப்பாக விஞ்ஞான ஆய்வு கூட களத்தரிசிப்பு தரவு சேகரிப்புக்கு உகந்த முறையாக அமைந்தது.

உதாரணமாக :-  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டாரய்தல்.


  • பேட்டி /உரையாடல் (Focus Group


தனி நபரோடு அல்லது சமூகத்தோடு கலந்துரையாடுவதன் மூலம் அல்லது பேட்டி காணுவதன் மூலம் தகவல் பெறப்படும் முறையாகும்.

உதாரணமாக :- 13வது அரசியல் யாப்புச் சீர் திருத்தம் தொடர்பில் நாடு பூரண மக்கள் கருத்துக்களை உள்வாங்கியமை.


  •  வினாக் கொத்து /தபால் மூலம்.

மாதிரி வினாப்பத்திரங்களை தயார்படுத்தி குறிப்பிட்ட தரவினை பெற்றுக் கொள்ளும் வழிமுறையாகும். தபால் மூலம் வினாக் கொத்துக்களை அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் பூரணப்படுத்தப்பட்ட வினாப்பத்திரத்தில் இருந்து தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டது. 

உதாரணம் :- இலங்கை குடிசன மதிப்பீட்டுப் படிவம், இலங்கை வாக்காளர் படிவங்கள் 


  • விடய ஆய்வு முறை(Case Studies),  Ethnographies 

 

இன்றைய சூழலில் மிகவும் பிரபல்யம் பெற்றுக்காணப்படும் ஓர் தரவுசேகரிப்பு முறையாகும். பிரச்சினைகள் வழங்கப்பட்டு அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதன் தரவுகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றுத.


  • உசாத்துணைகள்/ Documents & Record


இவை இரண்டாம் நிலை தரவுகளை சார்ந்ததாகும். ஏற்கனவே பெறப்பட்ட முடிவுகளை பிரிதொரு ஆய்விற்காக பயன்படுத்தப்படுகின்றது. ஆய்வாளர் ஆய்வின் ஆதாரமாக வழங்குவார்.


இலத்திரனியல் முறையில் தரவுகளைக் கையாள்வதற்கு கணனிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியோக மென் பொருட்களும் உள்ளன.

  • உதாரணமாக :- MS – Access

  •                                  My SQL 

  •                                  Fox Pro

  •                                  Oracle

  •                                  SQ Lite

  •                                  Angurrjs

                                         
                                   

போன்றவற்றை குறிப்பிடலாம். இவ் மென் பொருட்களுக்கான தரவுகளை சேகரிப்பதற்கு பல முறைகள் காணப்படுகின்றன.



விமான ஒளிப்படங்கள்

விமானங்களில் கமராக்கள் பொருத்தப்பட்டு புவியின் மேற்பரப்பு அம்சங்கள் கமராவின் தொலையுணர்வு மூலம் உணரப்பட்டு படமாக்கப்படுகின்றது. இப்படங்கள் GISயின் உதவியுடன் பல படைகளாக்கப்பட்டு (Layer) பிரிக்கப்பட்டு வகைகளின் அடிப்படையில் சேமிக்கப்படுகின்றது. பெரும்பாலும் விமான ஒளிப்படங்கள் ஆரம்பத்தில் கருப்பு வெள்ளைப் படங்களாக காணப்பட்டன. தற்பொழுது பலூன்கள் மூலம் படமாக்கப்படுவதனைக் காணலாம்.


செய்மதி தொலையுணர்வு (RS)

புவியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஓர் தொழிநுட்பமாகும். செய்மதிகள் புவியின் மேற்பரப்பினை படமாக்கி தரவுகளைத் தருகின்றன. பெரும்பாலான புஐளு தரவுப் பகுப்பாய்வுகளுக்கு இப் படங்களின் உதவி அளப் பெரியதாகும். 


பூகோள நிலையறி முறை (GPS))

புவி மேற்பரப்பில் இடம் சார்ந்த அம்சங்கள் தொடர்பான தரவினைப் பெற்றுக் கொள்வதற்கு புPளு பயன்படுத்தப்படுகின்றது. புவியின் இடம் சார்ந்த அகலாங்கு, நெட்டாங்கு தொடர்பான தரவுகளை GIS நுட்பத்திற்கு வழங்கி தரவுப் பகுப்பாய்விற்கு பங்காற்றுகின்றது. 


Drone

சிறிய விமான வடிவினைப் போன்ற இயந்திரமாகும். நவீன காலத்தில் புதிய படமாக்கல் முறைக்கு பயன்படுத்துகின்றனர். இராணுவப் புலனாய்வுத் துறைக்கு பெரிதும் உதவுகின்ற ஓர் கருவியாகும் இதனுள் அசைவு கமராக்கள் (Motion Camera) பொருத்தப்பட்டு தரவுகள் பெறப்படுகின்றது.


இலத்திரனியல் முறை பாரம்பரிய முறையில் இருந்து தோன்றிய மற்றுமொரு வடிவமாகும். வன்பொருட்கள் வடிவில் இருப்பவைகள் மென் பொருட்களாக மாற்றப்பட்டிருப்பது இதற்கிடையிலான தொடர்பாகும். மேலும் பாரம்பரிய முறையான  அட்டவணைகளே இங்கு அடிப்படையாக அமைகின்றது.


இவ்விரு முறைகளிலும் பல வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்கலாம்.

இவ்விரு தரவு முறைகளில் பலவேறுபாடுகள் காணப்படுகின்றது. பாரம்பரிய தரவுமுறையில் தரவுகள் எப்போதும் நிலையானதாகவும் மாற்றி அமைக்கமுடியாததாகவும் காணப்படும்.

உதாரணமாக :- பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களை மாற்றம் செய்ய முடியாததாக காணப்படும். எனினும் மாற்றியமைக்கும் போது தரவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும். இலத்திரனியல் தரவுகளை கையாளுகின்ற முறையில் இலகுவாக அழிக்கக்கூடிய வகையில் காணப்படும்.(Update)


பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்ட தரவுகள் நிலையான அளவுத்திட்டத்தின் அடிப்படையில் வரைய அல்லது அமையப்பெற்றிருக்கும். இலத்திரனியல் முறையில் அளவுத்திட்டத்தினை மாற்றியமைக்கக்கூடிய வகையில் காணப்படும்.

உதாரணமாக :- அதிகமான அட்டவணைகளை அமைக்கவேண்டும். இலத்திரனியல் தரவுக் கட்டமைப்பில்  Relationship கொடுக்கக் கூடியதாக அதாவது தரவுகளை முதன்மை ஆய்வின்( Primary key) அடிப்படையில் தொடர்புபடுத்தக் கூடியதாக காணப்படுகின்றது.


பாரம்பரிய முறையினைப் பொருத்தவரையில் ஆரம்பச் செலவு என்பது குறைவாக காணப்படும். காகிதாதிகளுக்கான செலவு குறைவானதே. இலத்திரனியல் தரவு கையாளுகைக்கான செலவு மிக அதிகமாகும். அதற்கான கணனி, மென் பொருட்கள் என்ற ஆரம்பச் செலவு அதிகமாககக் காணப்படும்.


பாரம்பரிய முறையில் அதிகளவான மனித முயற்சிகள் காணப்படும். அதிகளவானவர்கள் தரவுக் கையாளுகையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். இலத்திரனியல் முறையில் சில சொற்ப அளவானவர்கள் காணப்படுவர். மேலும் இவர்கள் வீட்டிலிருந்து தரவுகளை உட்செலுத்துபவர்களாகவும் காணப்படுவர்.

உதாரணமாக :- Online Data Entry Job, Free Lancer.


பாரம்பரிய முறையைப் பொருத்தவரையில் அதிகளவாக காலம் எடுக்கக் கூடியதாக இருக்கும். இலத்திரனியல் முறையில் மிகக் குறைந்த காலத்தில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யக் கூடியதாக காணப்படும்.


பாரம்பரிய முறையில் துள்ளியத் தன்மை என்பது இலத்திரனியல் முறையினை விட குறைவானதாகும். நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டதாக இருக்கும். மனித தவறுகள் /வேண்டப்படாத கிறுக்கல்கள் இடம்பெறாது.



பாரம்பரிய முறையில் தரவுகளை கையாளும் போது பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவையாவன.


தரவுகள் மிகையாக காணப்படுதல். ஒவ்வொரு கோப்புகளிலும் அதே மாதிரியான தரவுகள் சேமிக்கப்படுவதனால் தரவுகளில் மிகை ஏற்படுவதனை காணலம். அதிகளவான சேமிப்பு இடங்கள், செலவு மற்றும் மேலதிக நேரம் என்பன அவசியமாகின்றது. இதற்காக மேலதிக ஆளனினர் இணைக்க வேண்டிய தேவையேற்படும்.

உதாரணமாக. ஊழியர்களின் சுயவிபரக் கோவைத் தரவுகள்(Personal File) மற்றும் சம்பள பட்டியல் (Payroll) ஆகிய இரண்டிலும் தொழிலாளர்களின் பெயர், பதவி என்பன காணப்படும். இவ்வாறு மீண்டும் தரவுகள் சேமிக்கப்பட்டு மிகை நிலைகாணப்படும்.


மேலும், பாரம்பரிய முறையில் தரவு பகிர்வு என்பது வரையறுக்கப்பட்ட வகையில் காணப்படும்.


குறிப்பிட்ட முறையில்(காபன் தாள்) பிரதியேடுக்கப்பட்டு தரவுகள் பகிர்ப்படுகின்றன. பகிர்வுக்கான கால நேரம் மிகக் கூடுதலாக காணப்ப:டும்.

தரவுக்கான பாதுகாப்பு என்பது குறைவாகும். மனித மற்றும் ஏனைய புற காரணங்களினால் தரவுகள் அழிவடையக்கூடிய, மாற்றமடைய கூடிய நிலமை ஏற்படலாம். இத்தரவுகளை சேகரிப்பதற்கான இடங்கள் மற்றும் செலவுகள் உயர்வானதகவுள்ளது.


நவீன முறையிலும் பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. நவீன முறையில் தரவுகளை உட்செலுத்துகின்றபோது வலுக்கள் ஏற்படின் முழத் தரவுத்தளத்தையும் பாதிப்படைய செய்யும். தரவு தொடர்பான நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகின்றது.  உதாரணமாக, தவறுதலாக அல்லது பிழையாக உட்செலுத்தப்பட்டால் தரவுகளை இணைப்புச் செய்து(Relationship)  பகுப்பாய்வு செய்யும் போது பிழையான முடிவுகளே கிடைக்கும்.


மேலும், நவீன முறையில் தரவுகள் சேகரிக்கப்படுகின்ற கனணிகள் மற்றும் வன்பொருட்களில் பாதிப்புகள் நச்சு நிரல்களின் (வைரஸ்) தாக்கத்தினால் அத்தரவுகளைப் பெறமுடியாமல் போகலாம்.

இம்முறையில் தரவுகள் தற்போது இணையதள சேவர்களின்  முகில் கட்டமைப்பு(Colud Systerm ) போன்ற தளங்களில் சேமிக்கப்படுகின்றன. இத்தரவுகளை சட்டவிரோதமாக பயன்படுத்ததுவதற்காக ஹேக்கர்ஸ் இத்தளங்களை ஊடுருவி தகவல்களை அனுமதியின்றி எடுத்துச் செல்கின்கின்றமை.


நவீன முறையினை கையாளக்கூடிய அறிவு இருந்தால் மாத்திரமே இதன் பயன்பாடு சாத்தியம். மேலும், முகாமைத்துவம் செய்வது இலகுவாக இருந்தாலும் பாரமரிப்பு கடினமான ஓர் விடயமாகும்.


எனவே, தரவுகளை கையாள்வதில் பாரம்பரிய முறைக்கும் நவீன முறைக்கும்  தொடர்புகள் காணப்படுகின்றன. இவ்விரு முறைகளிலும் பிரச்சிகைகள் இருப்பதனைக் காணலாம். பொதுவாக இவ்விரு முறைகளும் கால சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தல் வேண்டும். எவ்வாறாயினும், தரவுகளை உட்செலுத்துதல், சேமித்தல் மற்றும் மீள்பயன்பாடு என்பன தரவுகள் கையாளப்படும் முறைகளாகும்.


உசாத்துணைகள்


  • ஆசிரியர் அறிவுரை வழிகாட்டி, தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் தரம் 13, கல்வி வெளீட்டு திணைக்களம், மகரமக.

  • Data processing & Data Processing Methods, www.Planningtank.com/caterography/computerapplication. Acces time : 07.30am Date:  December 03.

  • Greeta Fitzagerald & Mike FitzGIibbon, A Comparative Analysis of Traditional & Digital Data Collection Methodes, Preprinters of world congress.

-YASIR. BA (BA),

EASTERN UNIVERSITY, SRI LANKA.



Comments

Post a Comment

Popular posts from this blog

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Case Study Analysis Of MAS Holdings

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.